செர்ஜிபி நகர நீதிபதியாக இருக்கும் மார்சல் மாண்டால்வோ, குற்றவியல் வழக்கு ஒன்றில் தொடர்புடையை வாட்ஸ்அப் உரையாடல்களை தர வேண்டும் என வாட்ஸ்அப் நிர்வாகாத்திடம் கேட்டு இருந்தார். ஆனால் வாட்ஸ்அப்-இல் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய வசதியால் அதனை எங்களால் கூட தர முடியாது என கூறியது வாட்ஸ்அப் நிர்வாகம்.
நீதிமன்றம் கேட்ட தகவலை தர மறுத்ததால் திங்கள் கிழமை காலை முதல் 72 மணி நேரம் வரை வாட்ஸ்அப் உபயோகத்துக்கு தடை விதித்தார் நீதிபதி. ஆனால் எங்களிடம் எந்த தகவலும் இல்லை எனவும், பொதுமக்கள் அனுப்பும் எந்த தகவலும் எங்கள் சர்வரில் இருக்காது. தகவல் அனுப்பப்படும் இடத்தில் இருந்து அது சென்று சேரும் இடத்தில் மட்டுமே அந்த தகவல் இருக்கும். சம்மந்தப்பட்ட நபர்களை தவிர வேறு யாராலும் அதைப் படிக்க முடியாது. வாட்ஸ்அப் நிர்வாகத்தால் கூட அதனை படிக்க முடியாது என விளக்கம் அளித்துள்ளது வாட்ஸ்அப் நிர்வாகம்.