இந்த கட்டிடத்தில் 25 ஆயிரம் உடல்களைப் பாதுகாக்க முடியும். கல்லறை போன்றே இருக்காது என்பதுதான் இதன் சிறப்பு அம்சம். கல்லறையில் இளைப்பாறுவதற்கு அறைகள், சிறிய நீர்வீழ்ச்சி, அழகான தோட்டம், கட்டிடத்தின் உச்சியில் ஆலயம், சிற்றுண்டி கூடம் என்று அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு அறையும் நல்ல காற்றோட்ட வசதியுடன், 6 உடல்கள் வைக்கும் அளவிற்கு கட்டப்பட்டுள்ளது. ஒரு உடல் மட்கிப் போவதற்கு 3 ஆண்டுகள் ஆகும். அதற்குப் பிறகு மட்கிய உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு விடும்.
இறந்தவர்களின் உடல் இங்கேயே இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், அதிகக் கட்டணம் செலுத்தி, இங்கேயே வைத்துக்கொள்ளலாம்.