உடலுறவிற்கு அழைத்து, கழுத்தை அறுத்த காதலி!!

ஞாயிறு, 21 மே 2017 (11:51 IST)
ஜேர்மனி நாட்டில் உடலுறவிற்கு அழைத்து காதலனின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலிக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


 
 
காதலர்கள் இருவரும் ஒரே குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. காதலனின் தொந்தரவை தாங்க முடியாமல் காதலி அவரை கொலை செய்ய திர்மானித்துள்ளார்.
 
இந்நிலையில் காதலைனை உடலுறவிற்கு அழைத்து கட்டிலில் காதலனின் சம்மதத்துடன் அவனை கட்டிப்போட்டு, வீட்டில் இருந்த மரத்தை அறுக்கும் இரும்பு ரம்பத்தை எடுத்து காதலனின் கழுத்தை அறுத்து காதலி கொலை செய்துள்ளார்.
 
இதனை தொடர்ந்து காதலி கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் வழக்கை விசாரித்து 12 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்