பயங்கர ஆயுதங்களுடன் மதியம் 12 மணியளவில் தீவிரவாதிகள் மோட்டார் சைக்கிள்களில் கிராமத்துக்குள் வந்து, கிராமத்தினர் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டதுடன், வீடுகள், வாகனங்களுக்கும் தீ வைத்து எரித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்கதலில், 45 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் குண்டுக்காயங்களுடன் அருகிலுள்ள புதர்ப் பகுதிக்கு தப்பிச் சென்ற மேலும் சிலர், உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தீவிரவாதிகள் தீ வைத்ததில் கிராமத்திலிருந்த பாதிக்கும் மேற்பட்ட வீடுகள், 50 மோட்டார் சைக்கிள்கள், 4 கார்கள் சேதமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னர், அப்பகுதி மக்கள் வைத்திருந்த உணவுப் பொருள்கள், மற்றும் கால்நடைகளை தீவிரவாதிகள் எடுத்துச் சென்றதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.