'உளவாளிகள் அறுவடை' - இரண்டு பேரின் தலையை வெட்டிய தீவிரவாதிகள்

செவ்வாய், 3 மார்ச் 2015 (19:42 IST)
பாதுகாப்பு படைக்கு உளவு பார்த்தாக கூறி இரண்டு பேரை தலையை வெட்டி கொலை செய்து போஹோ ஹரம் தீவிரவாதிகள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
 
வீடியோவில் முகத்தை மறைத்துக் கொண்ட தீவிரவாதிகள் இரண்டு நைஜீரியர்களை தலையை வெட்டிக் கொல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது. 'உளவாளிகள் அறுவடை' என்று அழைக்கப்பட்டு வீடியோ சமுக வலைதளமான டுவிட்டரில் தீவிரவாதிகளால் வெளியிடப்பட்டுள்ளது. 
 
தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டவர்கள் தாவூத் முகமது மற்றும் முகமது அவ்லு என்று தெரியவந்துள்ளது. நைஜீரியா நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள சாட் மற்றும் கேமரூன் நாடுகளில் போஹோ ஹரம் தீவிரவாதிகள் அடிக்கடி புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
 
இதனால் அந்த பகுதியில் சாட் ராணுவம், கேமரூன் ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அண்டை நாடுகளை சேர்ந்த ராணுவம் நைஜீரியாவுடன் இணைந்து போஹோ ஹரம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்