பொம்மையை திருமணம் செய்து கொண்ட பாடிபில்டர்!

வெள்ளி, 27 நவம்பர் 2020 (20:14 IST)
பொம்மையை திருமணம் செய்து கொண்ட பாடிபில்டர்!
கஜகஸ்தான் நாட்டில் பொம்மையை பாடிபில்டர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கஜகஸ்தான் நாட்டில் பாடிபில்டராக இருப்பவர் யூரி. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு சிலிக்கான் செக்ஸ் பொம்மை ஒன்றை வாங்கி தனது வீட்டில் பாலியல் இச்சைக்காக பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது 
 
ஒரு கட்டத்தில் அந்த பொம்மையை காதலிக்க தொடங்கிய அவர் தற்போது அந்த பொம்மையை திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து யூரியின் இந்த முடிவுக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இருப்பினும் எதிர்ப்புகளை மீறி தான் காதலித்த பொம்மையை யூரி திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சிலிகானில் செய்யப்படும் அழகான பொம்மைகள் உலகம் முழுவதும் ஆன்லைன் மூலம் அதிக அளவில் கடந்த சில வருடங்களில் விற்பனையாகி வருகிறது என்பதும் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்