ஜோ பைடனின் வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு – தேர்வாளர்கள் குழு அதிரடி!

செவ்வாய், 15 டிசம்பர் 2020 (10:07 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனின் வெற்றியை அதிகாரப்பூர்வமாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். ஆனால் தனது தோல்வியை ஒத்துக்கொள்ளாமல் ட்ரம்ப் பிடிவாதம் பிடித்து வந்தார். ஆனால் பிடனின் வெற்றி உண்மையானது என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதையடுத்து ஜனவரி மாதம் பிடன் பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில் இப்போது ஜோ பைடனின் வெற்றியை அதிகாரப்பூர்வமாக தேர்வுக்குழு உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். தேர்தலில் பைடன் பைடன் 306, ட்ரம்ப் 232 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து பேசியுள்ள ட்ரம்ப் மேலும் சில சவால்களை முன்னெடுக்க போவதாக அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்