நேற்றிரவு தலைநகர் டாக்காவிலிருந்து ஒரு பேருந்து பரிசால் என்ற மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்பேருந்து பரிட்பூர் அருகே சென்று கொண்டிருந்த போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி பேருந்தில் பயணம் செய்த 24 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் 22 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.