இந்த குழந்தையின் தாய் பிரிட்டானி கருவுற்றிருந்தபோது, பரிசோதனை செய்துள்ளார். அப்பொழுது Anencephaly என்ற மண்டையோட்டு குறைபாட்டு நோயுடன் குழந்தை இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனால் மண்டையோடும் பெருமூளை வளர்ச்சியும் இல்லாத குழந்தை என்பதால் 23 வாரங்களில் கருக்கலைப்பு செய்யுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இறுதியில் குழந்தையைப் பெற்றுவிடத் தீர்மானித்தார்கள். இருதியில் குழந்தை நலமாகப் பிறந்தது. ஆனால் பாதி மண்டை மட்டும்தான் இல்லை.
பின்னர், குழந்தை பிறந்து 1 வருடம் கடந்துள்ள நிலையில், எங்கள் மகனின் இவ்வாறான நிலை ஆரம்பத்தில் எமக்குக் கடினமாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை, எந்நேரத்திலும் நாங்கள் அவனை இழக்க நேரிடும் என நினைத்தோம். ஆனால், நாங்கள் நினைத்ததற்கு மாறாக அவன் தற்போது மிக திடமாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ளான் என்று ஜெக்சனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.