ஆப்பிள் நிறுவனத்தின் மீது அமெரிக்க அரசு தொடர்ந்த வழக்கு வாபஸ்

செவ்வாய், 29 மார்ச் 2016 (15:11 IST)
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பாஸ்வேர்டை அமெரிக்க காவல் துறைக்கு அளிக்க மறுத்ததற்காக அமெரிக்க அரசு அந்நிறுவனத்தின் மீது  வழக்கு தொடர்ந்தது.


 

 
இத்தகைய தகவலை வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டவட்டமா மறுத்து வந்தது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை தற்போது அமெரிக்கா கைவிடுவதாக அறிவித்துள்ளது.
 
அமெரிக்க நாட்டின் சில இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அவர்களை கண்டறிவதற்காக பாஸ்வேடை அந்நாட்டு அரசு கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்