இருவரும் சந்தித்தபோது ஒருவரையொருவர் கட்டித்தழுவி ஆனந்தமடைந்தனர். தாமஸ், ஜெனியின் கையை தனது இதயத்தில் வைத்து, அவளுக்கு முத்தம் கொடுத்தார். பிறகு அவளை மணமகன் பால் மானிர் கையில் ஒப்படைத்து திருமணத்தை நடத்தி வைத்தார். தந்தையின் இதயம் தன்னை வாழ்த்தியதால் மகிழ்ச்சியடைந்த ஜெனி, தாமஸின் கையை பிடித்து நன்றி தெரிவித்தார்.