உயிருடன் உள்ளார் ஒசாமா: எட்வர்ட் ஸ்னோடென் அதிர்ச்சி தகவல்

செவ்வாய், 1 செப்டம்பர் 2015 (01:06 IST)
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது ஒரு நாடகம் என்றும், ஒசாமா பின்லேடன் தற்போதும், உயிருடன் உள்ளதாக எட்வர்ட் ஸ்னோடென் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
 

 
உலக நாடுகளை நடுநடுங்க வைப்பதில் அமெரிக்காவிற்கு நிகர் யாருமில்லை. ஆனால், அந்த அமெரிக்க அரசின் உளவு ரகசியங்களை வெளியிட்டு அமெரிக்காவையே நடுநடுங்க வைத்தவர் எட்வர்டு ஸ்னோடன்.
 
தற்போது, ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ள எட்வர்டு ஸ்னோடன், பிரபல நாளிதழுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், கடந்த 2013ஆம் வருடம் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன், தனது 5 மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் கொலை செய்யப்பட்டது போல பொய்யான நாடகத்தை அமெரிக்கா அரங்கேற்றியது.
 
ஒசாமா மற்றும் அவரது குடும்பத்தாரை பஹாமாஸில் யாருக்கும் தெரியாத இடத்திற்கு அனுப்பி வைத்தது. இந்த நாடகத்திற்கு பாகிஸ்தான் உளவுப்படையும் துணையாக இருந்தது.
 
அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கொலை செய்யப்டபடவில்லை. அவர் உயிருடன் தான் உள்ளார். பஹாமாஸில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
 
ஒசாமா உயிருடன் தான் உள்ளார் என்பதற்கு பல ஆதாரங்களை முன்வைத்து நான் எழுதியுள்ள புத்தகம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது என்றார். இந்த தகவல், தற்பொழுது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்