அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டது ஒரு நாடகம் என்றும், ஒசாமா பின்லேடன் தற்போதும், உயிருடன் உள்ளதாக எட்வர்ட் ஸ்னோடென் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
தற்போது, ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ள எட்வர்டு ஸ்னோடன், பிரபல நாளிதழுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில், கடந்த 2013ஆம் வருடம் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன், தனது 5 மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். பாகிஸ்தானில் ஒசாமா பின்லேடன் கொலை செய்யப்பட்டது போல பொய்யான நாடகத்தை அமெரிக்கா அரங்கேற்றியது.