15 பயணிகளை வரிசையாக நிறுத்தி சுட்டுக்கொன்ற கும்பல்

சனி, 26 ஜூலை 2014 (15:42 IST)
ஆப்கானிஸ்தானில் சாலையில் வரிசையாக நிறுத்தி 3 பெண்கள், 1 குழந்தை உட்பட 15 பயணிகளை ஒரு கும்பல் சுட்டுக் கொன்றுள்ளனர்.

மத்திய ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு கும்பல் இரண்டு வாகனங்களை வழிமறித்து அதில் இருந்த பயணிகளை கீழே இறக்கியுள்ளனர்.

அவர்களை சாலையோரம் வரிசையாக நிற்க வைத்து ஒருவர் பின் ஒருவராக சுட்டுக்கொன்றுள்ளனர். இவ்வாறு 3 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.

ஒருவர் மட்டும் அங்கிருந்து தப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த வெறிச் செயலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

சில தினங்களுக்கு முன்னர் ஹெராத் நகரில் பின்லாந்து தொண்டுநிறுவன பெண் ஊழியர்கள் இரண்டு பேர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தாலிபான் தீவிரவாதிகள் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்தில் அரசுப் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனவே இந்தத் தாக்குதலை அவர்கள் நடத்தியிருக்கக் கூடும் என்று அதிகாரிகள சந்தேகிப்பதாகக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்