ஆப்கானிஸ்தானில், ஒசாமா பின்லேடனுக்கு பின்பு, தாலிபான் இயக்க தலைவராக இருந்தவர் முல்லா உமர். இவர், அமெரிக்க படைகளின் தாக்குதலுக்கு பயந்து, பல ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்தார். முல்லா உமர் பற்றி தகவல் தருபவர்களுக்கு 10 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அரசு அறிவித்தது.
இந்நிலையில், முல்லா உமர் உயிரிழந்துவிட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு வட்டார தகவல் உறுதிபட தெரிவித்துள்ளது. ஆனால், இந்த தகவல் குறித்து தாலிபான் தீவிரவாத அமைப்பு கூறுகையில், முல்லா ஒமர் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளது.