ஆடம் ஜான்சன் கடந்த 2012ஆம் ஆண்டு சண்டர்லேண்ட் அணிக்காக 10 மில்லியன் பவுண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது ஆடம் ஜான்சன், இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் சந்தர்லேண்ட் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற காவல் துறையினர் 15 வயது சிறுமியுடன் பாலியல் உறவு வைத்த குற்றத்திற்காக சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், விசாரணை முடியும் வரை ஆடம் ஜான்சனை சஸ்பெண்ட் செய்வதாக சந்தர்லேண்ட் அணி அறிவித்துள்ளது.