மேலும் ஷியா பிரிவினர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அவர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் தீவிரவாதிகள் கருதுவதால், ஷியா பிரிவினர் அதிகமாக வாழும் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இத்தகைய தாக்குதல்களால் கடந்த 10 நாட்களில் மட்டும் 150 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லபட்டுள்ளனர்.
ஈராக்கின் மேற்கு பாக்தாத்தில் உள்ள ஷியா மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 21 பேர் பலியானார்கள் 25 பேர் படுகாயம் அடைந்தனர். மேற்கு பாக்தாத்தில் உள்ள மசூதியில் மர்ம மனிதன், தான் அணிந்து இருந்த வெடிகுண்டு வெடிக்க செய்ததில் மசூதி கடும் சேதமடைந்தது.