டால்லோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 74 பயணிகளுடன் சோமாலியாவைச் சேர்ந்த மொகடிஷூவில் இருந்து டிஜிபோட்டி நாட்டிற்கு நேற்று சென்றுகொண்டிருந்தது. விமானம் புறப்பட்டு 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் வலது பக்கத்தில் ஏதோ ஒன்று வெடிப்பது போல் சத்தம் கேட்டது. இதையடுத்து அந்த பகுதியில் தீ பற்றியது. இதனைக் கண்ட விமானி விமானத்தை மொகடிஷூயில் அவசரமாக தரையிறக்கினார். விமானம் தரையிறங்கியதும் உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.