ஆப்கானிஸ்தான் நாட்டின் கோர் மாகாணத்தை சேர்ந்த ஒருவரால் உழைத்து, சம்பாதித்து தனது குடும்பத்தை பராமரிக்க முடியவில்லை. இதனால், தனது 6 வயது மகளான ஹாரிபவுல் என்பவரை அப்பகுதியில் வசித்து வரும் சையத் அப்துல் கரீம் (55) என்பவருக்கு ‘பண்டமாற்று’ முறையில் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார்.
அதை, ஏற்க மறுத்த காவல்துறையினர், பெண்ணின் தந்தை மீதும், அந்த வயதானவர் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். இதற்கிடையே, காவல்துறையினர், அந்த சிறுமியை அவரது, தாயாரிடம் ஒப்படைத்தனர். சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் 6 வயது சிறுமியை 60 வயது முதியவர் திருமணம் செய்து கொண்டதும், இது போன்று, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.