காதலனின் பிறப்பு உறுப்பில் சூடுபோட்ட காதலிக்கு 9 மாதம் சிறை
வெள்ளி, 18 செப்டம்பர் 2015 (16:38 IST)
முன்னாள் காதலியுடன் இரவில் தங்கியதால், காதலனின் பிறப்பு உறுப்பில் சூடுவைத்த இளம்பெண்ணிற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 9 மாத சிறை தண்டனை விதித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் அடிலெயிட் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மவுண்ட் பார்க்கர் பகுதியைச் சேர்ந்த புரான்வென் ஜாய் பார்க்கர் (22) என்ற இளம்பெண், தனது காதலர் அவரது முன்னாள் காதலியுடன் இரு இரவுகளைக் கழித்ததை அறிந்து கோபமடைந்துள்ளார்.
இதனால், இருவருக்குமிடையே கடும் வாக்குவாதத்தில் நிகழ்ந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த இளம்பெண், தலைமுடியை நேராக்குவதற்குப் பயன்படும் உபகரணத்தால் காதலரின் பிறப்புறுப்பை சுடப் போவதாக கூறியுள்ளார். தனது காதலியின் கோபத்தைத் தணிக்க வேறு வழி தெரியாத காதலர் அதற்கு சம்மதித்துள்ளார்.
பின்னர், இந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். நீதிமன்றத்தில் அளித்துள்ள புகாரில், காதலி வைத்த சூட்டால் பிறப்புறுப்பில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதுடன், அதன் செயல் திறனும் பாதிக்கப்பட்டுள்ளதாக காதலர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இது குறித்து நீதிமன்றத்தில் விளக்கமளித்த ஜாய் பார்க்கர், தனது காதலரின் செயலினால் ஆத்திரமடைந்ததாகவும், அதனால் அவருக்கு எச்சரிக்கை செய்யவே அவ்வாறு செயல்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது இவ்வளவு தூரம் விபரீதமாக போய் முடியும் என்று தான் நினைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி மஸ்கட், இளம்பெண்ணுக்கு 9 மாத சிறைத் தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
தாலி அணியாமல் இருப்பது பெண்களின் சுதந்திரம்: குஷ்பு பேச்சு