தம்பியை சுட்டுக் கொன்ற 6 வயது சிறுவன்

திங்கள், 27 ஜூன் 2016 (13:57 IST)
அமெரிக்காவில் விளையாடிக் கொண்டிருந்த போது தம்பியை 6 வயது சிறுவன் சுட்டுக் கொன்றான்.


 

 
அமெரிக்காவில் நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஸ்புருல் என்பவருக்கு 6 மற்றும் 4 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். அந்த இரண்டு சிறுவர்களும் தங்கள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது தயாரின் குண்டு நிரப்பிய துப்பாக்கியை எடுத்துக் கொண்டு விளையாடியுள்ளனர். 
 
6 வயது சிறுவன் விளையாட்டாக தன் தம்பியை துப்பாக்கியால் சுட்டுயுள்ளான். இதில் அந்த சிறுவன் இறந்து விட்டான். சிறுவனின் தாயார் இடியானா கைது செய்யப்பட்டார். குழந்தையின் நலனுக்கு எதிராக செயல் பட்டதாகவும், ஆயுதங்களை பாதுகாக்க தவறியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்