சவூதி அரேபியாவில் குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது மிகவும் சர்வ சாதாரணமாக நடைமுறையில் இருந்து வருகிறது. அப்பாவிகளுக்கும் அவசர, அவசரமாகத் தீர்ப்பு வழங்கி, தண்டனை அளிக்கப்பட்டு விடுகிறது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே உள்ளது.
இந்நிலையில், நடப்பாண்டில் ஒரே மாதத்திலேயே 56 பேருக்கு வழங்கிவிட்டார்கள். இது குறித்து உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்ததோடு, கடும் கண்டனத்தையும் எழுப்பியுள்ளன.
ஜனவரி 31ஆம் தேதியன்று சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட அவருக்குமரண தண்டனை நிறைவேற்றப் பட்டதோடு, ஜனவரி மாதத்தில் 56 தண்டனைகள் நிறைவேறியுள்ளன.