கோத்தபய ராஜபக்சேவிற்கு 50 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு

சனி, 13 ஜூன் 2015 (20:33 IST)
உயிர் அச்சுறுத்தல் காரணமாக கோத்தபய ராஜபக்சேவிற்கு  8 இராணுவ அதிகாரிகள் மற்றும் 50 ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

 
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்சேவின் பாதுகாப்பிற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக ஊடக மற்றும் நாடாளுமன்ற அமைச்சர் கயந்த கருணாதிலக்க பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.
 
புலனாய்வுப் பிரிவின் அறிக்கையை சுட்டிக்காட்டிப்பேசி, கோத்தபய ராஜபக்சேவிற்கு உயிர் அச்சுறுத்தல் இல்லை எனினும், தற்போது அவருக்கு 8 இராணுவ அதிகாரிகள் மற்றும் 50 இராணுவ வீரர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கயந்த கருணாதிலக்க பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்