43 வயதுக்கும், 60 வயதுக்கும் இடைப்பட்ட இவர்கள் மீது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருந்தனர் என்றும், 2003 - 2010ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தீவிரவாத அமைப்புக்கு நிதி சேகரித்தனர் என்றும் குற்றம் சுமத்தப்பட்டனர்.
2011ஆம் ஆண்டு இவர்களை நெதர்லாந்தின் கீழ் நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்திருந்த போதிலும், தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என்ற வகையில் தண்டனை அளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை தீவிரவாத இயக்க பட்டியலில் உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.