ஒரே அறையில் 42 பிணங்கள்: லண்டனில் அதிர்ச்சி!!

செவ்வாய், 20 ஜூன் 2017 (14:55 IST)
சமீபத்தில் லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தீ விபத்தில், ஒரே அறையில் 42 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


 
 
லண்டன் லான்கேஸ்டர் வெஸ்ட் எஸ்டேட் பகுதியில் உள்ள கிரென்ஃபெல் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் 79 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் 42 உடல்கள் ஒரே அறையில் இருந்ததாகவும், ஆனால் அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்படமுடியாத நிலையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த 42 பேரும் ஒரே அறையில் எவ்வாறு சென்றார்கள் என்பது தெரியாத கேள்வியாகவே  உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்