ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் உயிருடன் உள்ளனர்: சுஷ்மா சுவராஜ்

திங்கள், 8 பிப்ரவரி 2016 (00:30 IST)
ஈரானில், ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் உயிருடன் பத்திரமாக உள்ளதாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
 

 
ஈராக் நாட்டின் மோசூல் நகரிலிருந்து கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதத்தில் சுமார் 39 இந்தியர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர். அவர்கள் கடத்தப்பட்டு, பல மாதங்கள் ஆன நிலையில், அவர்களது நிலை குறித்து வெளியுலகத்திற்கு தகவல் ஏதும் கிடைக்கவில்லை.
 
இந்த நிலையில், கடத்தப்பட்ட நபர்களின் குடும்பத்தினர், டெல்லியில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நேரில் சந்தித்துப் பேசினார்கள்.
 
இது குறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், ஈரானில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் உயிருடன், பத்திரமாக உள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
 
விரைவில், கடத்தப்பட்ட அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவர் என்றும் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி அளித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்