அயர்லாந்தின் கேஸ்டில்பார் நகரில் வசிக்கும் சகோதரிகளான மைரெட் பிட்ஷ்பட்ரிக், ஜோலின் காட்பிரே மற்றும் பெர்னி வார்டு இவர்கள் தங்கள் இருப்பிடம் அருகே உள்ள மயோ பொது மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்கள் மூவருக்கும் ஒரே நாளில் குழந்தைகள் பிறந்தன. மொத்தம் இரண்டு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இது அங்குள்ள மருத்துவர்களுக்கும், நர்சுகளுக்கும் பெரும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற நிகழ்வு எங்களுக்கு தெரிந்தவரை இந்த மருத்துவமனையில் இதுவரை நடந்ததில்லை என்று கூறியுள்ளனர்.