லிபியா அருகே அந்த படகு சென்ற போது சர்வதேச மருத்துவ கண்காணிப்பு குழுவினர் அங்கு வந்தனர். அவர்கள் அந்த படகை மடக்கி சோதனையிட்டனர். அந்த படகின் கீழ் தளத்தில் 21 பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
இந்த படகில் 50 குழந்தைகள் உள்பட 209 பேர் பயணம் செய்தனர். அவர்கள் அனைவரையும் மருத்துவ குழுவினர் மீட்டனர். 22 பேரும் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை. படகில் இருந்த டீசலில் தண்ணீர் கலந்து அதன் மூலம் ஒரு வித நச்சு வாயு பரவியபடி இருந்தது. எனவே, அதனால் ஏற்பட்ட மூச்சு திணறலில் அவர்கள் இறந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆனால், ஒரு சில பெண்கள் கொலை செய்யப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன. எனவே, இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.