ஏமனில் சவுதி விமானங்கள் குண்டுவீச்சு : 20 இந்தியர்கள் பலி

புதன், 9 செப்டம்பர் 2015 (07:30 IST)
ஏமனில் சவுதி விமானங்கள் நடத்திய வான்வளி தாக்குதலில் 20 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.


 

 
ஏமனில் அரசுக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை ஒடுக்கும் விதமாக சவுதி தலைமையிலான கூட்டுப்படை அட்டகாசத்தில் ஈடுபடும் கிளர்ச்சிக் குழுக்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன.
 
இந்நிலையில் ஏமன் துறைமுகத்தில் கிளர்ச்சிக் குழு ஒன்று பெட்ரோலை திருடுவதாக கூட்டுப்படைக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கூட்டுப்படை நடத்திய வான்வளி தாக்குதலில் 20 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனரா? என்பது குறித்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
 
கடந்த கடந்த திங்களன்று கூட்டுப்படை நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழ்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்