சிங்கப்பூர் தேசத்தின் கிழக்கு ஜூராங் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 2ஆவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் மூன்று வயது குழந்தை பால்கனி ஓரம் நின்று தனது ஐ-பேடில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, பால்கனி தடுப்புக் கம்பியின் வெளிப்புறமாக ஐ-பேட் விழுந்து விட்டது.
அப்போது, அருகாமையில் சாலை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழக தொழிலாளர்கள் சண்முகநாதன் (35), முத்துக் குமார் (24) ஆகியோர் உடனடியாக விரைந்து சென்ற அவர்கள் 2ஆவது மாடிக்கு ஏறிச் சென்று குழந்தையை பத்திரமாக மீட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஏணியின் உதவியுடன் குழந்தையை கீழே இறக்கி காப்பாற்றினர். இந்த அவசர உதவியை செய்த சண்முகநாதன், முத்துக்குமார் இருவருக்கும் சிங்கப்பூர் அரசின் உள்நாட்டுப் பாதுகாப்பு படை வழங்கும் உத்வேக விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.