ரூ.52 லட்சத்திற்கு ஏலம் போன 2,500 ஆண்டு பழமையான பூனை சிலை

வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (10:33 IST)
எகிப்த்து நாட்டைச் சேர்ந்த 2,500 ஆண்டு பழமையான பூனை சிலை ரூ.52 லட்சத்துக்கு ஏலம் போனது.
 
2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான, வெண்கலத்தால் செய்யப்பட்ட, எகிப்த்து நாட்டைச் சேர்ந்த பூனை சிலை, இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.52 லட்சத்துக்கு ஏலம் போனது.
 
அந்த சிலையை வைத்திருந்த டக்ளஸ் லிட்டல் என்பவர், கடந்த 2003 ஆம் ஆண்டு காலமானார்.
 
பின்னர், அந்த சிலையின் சிறப்பை அறியாமல் அவரது குடும்பத்தினர், இது பயனற்றது என்று கருதி, அதை மூலையில் முடக்கி வைத்திருந்துள்ளனர்.
 
இந்நிலையில், அது, ஒரு ஏல மையதாரரின் பார்வைக்கு வந்துள்ளது, இதைத் தொடர்ந்து அது ஏலத்தில் வைக்கப்பட்டது.
 
அந்த பூனை சிலை, ரூ.52 லட்சத்துக்கு ஏலம் போனது. லண்டனிலுள்ள பிரபல வியாபாரி ஒருவர் அதை ஏலத்தில் எடுத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்