லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் அதிசயமாக தான் வளர்த்த நாயையே திருமணம் செய்துகொண்டார்.
FILE
அமண்டா ரோட்ஜர்ஸ் என்ற இந்த பெண்மணிக்கு வயது 47. இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவரை திருமணம் செய்துகோண்டார். ஆனால் இந்த உறவு நீடிக்கவில்லை விவாகரத்தில் போய் முடிந்தது.
அப்போது முதல் தனிமையில் வாழ்ந்து வந்த அமண்டா ஷீபா என்ற செல்ல நாயை வளர்த்து வந்தார்.
FILE
குரேஷியாவின் ஸ்லிப்ட் நகரத்தில் 200 பேர் முன்னிலையில் அமண்டாவுக்கும் ஷீபா என்ற நாய்க்கும் திருமணம் நடந்தது.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
ஷீபாவிடம் நான் முட்டிப் போட்டு என் காதலை தெரிவித்தேன், அது வாலாட்டி என் காதலை ஏற்றுக் கொண்டது. நான் கவலையாக இருக்கும்போதெல்லாம் ஷீபாதான் எனக்கு பெரிய ஆறுதல்.
ஒரு கணவருக்கு இருக்கவேண்டிய குணம் அதனிடம் இருக்கிறது. என்றார் அமண்டா.
இந்தத் திருமணம் சட்ட ரீதியாக செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.