வடமேற்கு பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 14 பேர் பலி

சனி, 16 ஜூன் 2012 (13:50 IST)
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள ஹைபர் மாகாணத்தின் லான்டி ஹேட்டல் நகர் மார்க்கெட் பகுதியில் குண்டு வெடித்தது.

இந்த சம்பவத்தில் 14 பேர் பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் பெஷாவரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த குண்டு வெடிப்பினால் பல்வேறு கடைகள் எரிந்து நாசம் ஆயின. குண்டு வெடிப்புக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்புகளும் பெறுப்பேற்க வில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்