மெல்போர்னில் குருத்துவாரா கட்டிடத்திற்கு தீ வைப்பு
ஆஸ்ட்ரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான வன்முறை உலக அளவில் கவன ஈர்ப்பு பெற்று வரும் நிலையில், மெல்போர்ன் நகரில் கட்டுமானத்தில் உள்ள குருத்வாரா கட்டிடத்திற்கு அடையாளம் தெரியாத சில நபர்கள் தீவைத்துள்ளது அங்கு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மெல்போர்ன் புறநகர்ப் பகுதில் உள்ள இந்தக் கட்டிடத்தில் ஜனவரி 12ஆம் தேதி திடீரென தீ ஏற்பட்டு கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது.
இது குறித்து இந்திஅ வெளியுறவுத் துறை ஆஸ்ட்ரேலிய அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆனால் இந்த தீச் சம்பவத்தில் ஒருவரும் காயமடையவில்லை.