மீண்டும் இந்தியா வருகிறது ஒபாமா குடும்பம்

புதன், 2 பிப்ரவரி 2011 (19:16 IST)
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி தன் மகள்களுடன் மீண்டும் இந்தியா வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் முறையாக தமது கணவருடன் இந்தியா வந்தார்.

மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்கு சென்ற அவர் மீண்டும் தன் மகள்கள் சஷா, மாலியாவுடன் இந்தியா வர இருக்கிறார்.

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனனை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசியபோது அவரிடம் இந்த தகவலை ஒபாமாவே தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன.

இந்தியாவில் தங்கி இருந்த நாட்களை சுகமான அனுபவமாக மிச்சல் கருதினார் என்றும், அவர் தன் மகள்களுடன் மீண்டும் இந்தியா வர விரும்புகிறார் என்றும் ஒபாமா கூறியதாகவும் அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்