மாயமான விமானத்திலிருந்து கிடைத்த கடைசி வார்த்தைகளையும் மாற்றியது மலேசியா!

செவ்வாய், 1 ஏப்ரல் 2014 (13:32 IST)
காணாமல் போன மலேசிய விமானத்தைப் பற்றிய முக்கியத் தகவல்களில் எப்போதும் மலேசியா முன்னுக்குப் பின் முரணாக பேசி வெறுப்பேற்றி வருவது தெரிந்ததே. ஆனால் விமானம் மாயமாகும் முன் பைலட் கூறியதாக அது தெரிவித்த கடைசி வார்த்தைகளியும் இப்போது வேறு என்கிறது மலேசிய அரசு.
முதலில் 'ஆல் ரைட், குட் நைட்' என்று கூறியதாக தெரிவித்த மலேசிய அரசு தற்போது "குட் நைட் மலேசியன் த்ரீ செவென் ஜீரோ" என்று தெரிவித்ததாக கூறுகிறது.
 
காணாமல் போன அன்று கடைசி செய்தி வந்த நேரம் மலேசிய நேரப்படி இரவு 1.19. இப்போது வெளியாகியுள்ள புதிய கடைசி வார்த்தை மிகவும் வழக்கமாக பைலட்கள் தெரிவிப்பதுதான் என்று நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
ஆனால் இதை அறுதியிடக் கூட இத்தனை நாட்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இன்னும் கடலில் இது தெரிகிறது, அது தெரிகிறது என்று கூறப்படுகிறதே தவிர புதிர் இன்னும் புதிராகவே உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்