பொன்சேகாவின் மனைவி அனோமாவும் ராஜினாமா

வெள்ளி, 20 நவம்பர் 2009 (16:56 IST)
இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவும் பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரணவிரு சேவா என்ற படைவீரர்கள் நலத்திட்ட அதிகார சபையின் தலைவராக அனோமா பொன்சேகா இதுவரை பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திடீரென தாம் வகித்து வந்த பதவியை அனோமா பொன்சேகா ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஊனமுற்ற படைவீரர்களது குழந்தைகள் பராமரிப்பு நிதியத்தில் அனோமா வகித்து வந்த பதவி நீக்கப்பட்டதன் காரணமாகவே, அவர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அவரது இந்த ராஜினாமாவை இராணுவத் தரப்பும் உறுதி செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்