பாக்தாத் கார்குண்டு தாக்குதல் 13 பேர் பலி

திங்கள், 4 ஜூன் 2012 (16:10 IST)
ஈராக் தலைநகர் பாக்தாதில் இரண்டு அரசு அலுவலகங்கள் அருகே கார்குண்டு வெடித்ததில் 13 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு 50 பேர் காயமடைந்தனர்.

ஷியா முஸ்லிம் சமய விவகார அலுவலகம் முன்பும், நகர சுகாதார துறை அலுவலகத்திற்கும் அருகே வெடிபொருட்கள் நிரப்பிய கார் வெடிக்கச்செய்யப்பட்டது.

இந்தப் பயங்கரத் தாக்குதலினால் அருகில் இருந்த கட்டிடங்களும், கார்களும் கடும் சேதமடைந்தன.

வெப்துனியாவைப் படிக்கவும்