பாகிஸ்தானில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 4 பேர் பலியாகினர்.
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஹாங்கு நகரில் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறை வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் வெடி குண்டு தாக்குதல் நடத்தினர்.
இதில் 4 பேர் பலியானதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 33 பேர் படுகாயமுற்றதாகவும் காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.