பாகிஸ்தானில் 16 தாலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

திங்கள், 3 செப்டம்பர் 2012 (16:34 IST)
பாகிஸ்தானின் அசாம் வார்சக் பகுதியில் பதுங்கியிருந்த தாலிபான் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் தாலிபான் தீவிரவாதிகள் 7 பலியானார்கள்.

மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இதே போன்று பாகிஸ்தானின் பஜ்பூர் மண்டலத்தில் உள்ள பத்வார் மலைவாழ்ப்பகுதியில் பாகிஸ்தான் துருப்புக்கள் தாலிபான் தீவிவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது மலைப்பகுதியில் பதுங்கியிருந்த தாலிபான் தீவிரவாதிகளை நோக்கி ராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் தாலிபான் தீவிரவாதிகளின் கமாண்டர் உள்பட 9 பேர் பலியானார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்