பங்காளதேஷ்: முஜிப்பூர் கொலையாளிகளுக்கு தூக்கு உறுதி

புதன், 27 ஜனவரி 2010 (18:32 IST)
பங்காளதேஷின் தந்தை என அழைக்கப்பட்ட ஷேக் முஜிப்பூர் ரஹ்மான் கொலையாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியது.

முஜிப்பூர் ரஹ்மான் கொலை செய்யப்பட்ட வழக்கில் 12 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நிலையில், இவர்களில் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கீழ் நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரும் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முகமத் இஸ்லாம் தலைமையிலான நான்கு பேரடங்கிய அமர்வு, கீழ் நீதிமன்றம் அளித்த மரணதண்டனையை உறுதிபடுத்தி இன்று தீர்ப்பளித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்