நேபாள விமான விபத்தில் 10 இந்திய சுற்றுலா பயணிகள் பலி

ஞாயிறு, 25 செப்டம்பர் 2011 (14:08 IST)
நேபாளத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் 10 இந்திய சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 19 பேர் பலியாகினர்.

நேபாளத்தின் புத்தா விமான போக்குவரத்து விமானம் சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது.சுற்றுலாவை முடித்துவிட்டு காத்மாண்டு நோக்கி அந்த் விமானம் திரும்பிக் கொண்டிருந்தது.

அப்போது லலித்பூர் மாவட்டம் கோட்டந்தா மலைப் பகுதியில் எதிர்பாராவிதமாக மோதி விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 19 பேரும் பலியாகினர்.இதில் 10 பேர் இந்திய சுற்றுலா பயணிகள் ஆவர்.மேலும் இந்த 10 பேரில் 8 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், விபத்து நிகழ்ந்த இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ள நிலையில் அவர்களது உடல்களை சென்னை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாகத் தெரியவருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்