ஜி-20 மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அதிபர் ஒபாமா சந்திக்க கூடும்

திங்கள், 18 ஜூன் 2012 (14:56 IST)
மெக்சிகோ நாட்டின் லாஸ் காபோஸ் நகரில் நடைபெற்று வரும் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் பங்கேற்கும் ஏழாவது ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டுள்ளார்.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவர் சந்திக்க கூடும் என கூறப்படுகிறது.

மேலும் ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்கல், கனடா மற்றும் இங்கிலாந்து பிரதமர்களான ஸ்டீபன் ஹார்பர் மற்றும் டேவிட் கேமரூன், பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹோலண்டே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் மெக்சிகோ அதிபர் பெலிப் கால்டிரான் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்