ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு

ஞாயிறு, 3 நவம்பர் 2013 (16:17 IST)
ஜப்பான் நாட்டின் கிழக்குப்பகுதியில் காலை 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் டோக்கியோ உள்பட பல நகரங்களில் கட்டிடங்கள் பலமாக குலுங்கின.

ஆனாலும் பெரிய சேதமோ, உயிர் இழப்போ ஏற்பட்டதாக தகவல் இல்லை. மேலும் இந்த நில அதிர்வு காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

இதுபோல தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள டோங்கோ தீவுகளிலும் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் சேத விவரம் தெரியவில்லை

வெப்துனியாவைப் படிக்கவும்