சீனாவில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சீனாவின் வடக்கில் மங்கோலியா பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. அதில் சுரங்க தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர்.
அப்போது சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலியாகினர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இப்பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்ற ஆண்டில் மட்டும் இது போன்ற சுரங்க விபத்தில் சிக்கி 1973 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.