சீனாவில் நிலச்சரிவு; 18 பள்ளி குழந்தைகள் மண்ணில் புதைந்து சாவு

வியாழன், 4 அக்டோபர் 2012 (12:19 IST)
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்த நிலச்சரிவிலபள்ளிக்கூடம் ஒன்று மண்ணில் அடியோடு புதைந்தது. இதில் 18 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சீனாவின் பல பகுதிகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனை அடுத்து ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் யுன்னானமாகாணத்தில் உள்ள இரண்டு பண்ணவீடுகள் மற்றும் யூப்ங்டாய் என்ற முதன்மபள்ளிக்கூடமும் மண்ணில் புதைந்தது. இதில் வகுப்பறையில் இருந்த 18 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குழந்தைகளின் உடலை மீட்கும் பணியில் மீட்பு குழிவினர் ஈடுப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன்.

வெப்துனியாவைப் படிக்கவும்