சிங்கப்பூரில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இந்திய இரட்டையர்கள்

புதன், 12 ஜூன் 2013 (17:42 IST)
FILE
சிங்கப்பூரில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த இந்திய இரட்டையர்களுக்கு மூன்றரை மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த இரட்டையர்களான ராமன் மற்றும் லட்சுமணன் செல்வராஜ் (26) ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் வேலை தேடி சிங்கப்பூர் சென்றனர்.

வேலை தேடிக்கொண்டிருந்த சமயத்தில், இந்திய பெண்களை சிங்கப்பூரில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சம்பாதித்து வந்த பாலமுருகன் என்பவரை அவர்கள் சந்தித்தனர்.

அவரிடம் வேலைக்கு சேர்ந்த இந்த சகோதரர்கள், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு உணவு வாங்கி தருதல், அவர்கள் சம்பாதித்த பணத்தை பாலமுருகனிடம் கொண்டு சேர்த்தல் போன்ற வேலைகளை செய்துவந்துள்ளனர்.

சிறிது நாட்கள் கழித்து, ராமன் மற்றும் லட்சுமணனிடம், பெண்களை ஒப்படைத்துவிட்டு, மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் பாலமுருகன் இந்தியாவை சேர்ந்த விபச்சார கூட்ட தலைவருக்கு அனுப்பிவிடுவதாக தெரியவந்துள்ளது.

இந்திய பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக சகோதரர்கள் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் கடந்த 3 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட இரட்டையர்களுக்கு மூன்றரை மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்