கோத்தபாயவுடன் கே.பி. திடீர் சந்திப்பு

செவ்வாய், 1 பிப்ரவரி 2011 (18:35 IST)
இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் இன்று திடீரென சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்தையின் போது வடமாகாணத்தின் அரசியல் நிலவரம் மற்றும் கள நிலவரம் போன்றவை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும், தாம் முன்னர் வட பகுதிக்கு விஜயம் செய்த போது மக்கள் முன் வைத்த கோரிக்கைகளை கே.பி.விளக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கோத்தபாயவிடம் தாம் முன்வைத்த பல கோரிக்கைகளில் மூன்று கோரிக்கைகளுக்கு அவரது அனுமதி கிடைத்துள்ளதாக கே.பி. தெரிவித்துள்ளார்.

குமரன் பத்மாநாதன் கடந்த இரண்டு தினங்களாக வடக்கு பகுதியில் மேற்கொண்ட விஜயத்தின் போது பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா, கனடா ஆகிய நாடுகளை சேர்ந்த 15 பேர் அடங்கிய குழுவொன்றும் வட மாகாணத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்