கென்னடி கலை மற்றும் அறிவியல் அமைப்பின் நிர்வாகக் குழுவில் மும்பை ஐ.ஐ.டி. மாணவர் நியமனம்: ஒபாமா அறிவிப்பு

சனி, 1 செப்டம்பர் 2012 (13:26 IST)
அமெரிக்காவில் உள்ள ஜான் எப்.கென்னடி கலை மற்றும் அறிவியல் அமைப்பின் ஒன்பது பேர் கொண்ட நிர்வாகக்குழுவின் உறுப்பினராக இந்திய-அமெரிக்கரும் முன்னாள் மும்பை ஐ.ஐ.டி. மாணவருமான ரோமேஷ் வாத்வானியை அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா நியமனம் செய்தார்.

இந்த அமைப்புக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆண்களும் பெண்களும் தங்களது திறமை மற்றும் அனுபவங்களை இந்த நிறுவனத்துக்கு அர்ப்பணித்து, இதன் மேன்மை மற்றும் புதிய பரிமாணத்துக்குத் தங்களை அர்ப்பணிப்பார்கள் என்று நம்புகிறேன்.

நானும் இன்னும் ஒரு மாதத்திலோ அல்லது சில வருடங்களிலோ இவர்களுடன் இணைந்து பணியாற்ற முன்வருவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்