கிளிக்கு ரெக்கை முளைச்சுடுச்சு.. பறந்து போயிடுச்சு... - ராஜபக்சவின் சோகம்

சனி, 19 ஏப்ரல் 2014 (10:55 IST)
போருக்குப் பிறகும்  தமிழர்களை சிறையில் தள்ளி  வரும் இலங்கை அதிபர் ராஜபக்சவின் மிகப்பெரிய சோகம் என்ன தெரியுமா?
 
அவர் வீட்டிலிருந்த கிளிகள் தப்பிச் சென்றுவிட்டதாம்!
 
தென் அமெரிக்காவில் இருந்து வரும் 'மக்காவ்' என்ற கிளிகள் ராஜபக்சவினால் வளர்க்கப்பட்டு வந்தது.
 
இதன் மீது 'பாசம்'வைத்திருந்தாராம் ராஜபக்ச. இந்த நிலையில் அங்கு நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது கடந்தவாரம் மக்காவ் கிளிகள் பறந்து போய்விட்டதாம்.
 
இந்தச் சோகம் ராஜபக்சவை உலுக்கி விட்டதாம். பத்திரிக்கைகளில் அந்த கிளிகளின் படங்களை வெளியிட்டு கண்டுபிடித்துத் தாருங்கள் என்று நாட்டு மக்களுக்கு வெண்டுகோள் விடுத்துள்ளாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்