ஊசிமூலம் மஞ்சள் காமாலையை பரப்பிய கொடூர டாக்டருக்கு 39 ஆண்டு ஜெயில்!

செவ்வாய், 3 டிசம்பர் 2013 (12:50 IST)
FILE
அமெரிக்காவில் ஊசி மூலம் மஞ்சள் காமாலை நோயை பரப்பிய டாக்டருக்கு 39 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள நியூஹம்ப்ஷியர் பகுதியைச் சேர்ந்தவர் டேவிட் கியாட்கோவ்ஸ்கி (34). இருதய டாக்டர். இவர் 3 மாகாணங்களில் 18 ஆஸ்பத்திரிகளில் மாறி மாறி பணி புரிந்தார்.

இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டில் ஒரு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த போது அவரை போலீசார் கைது செய்தனர். 46 பேருக்கு மஞ்சள் காமாலை நோயை பரப்பியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் தடை செய்யப்பட்ட மருந்துகளை பலருக்கு செலுத்தியதும், பல மருந்துகளை திருடியதும் தெரியவந்தது.

இவர் வலி நிவாரண மருந்துகளை திருடி அதனுடன் ஆல்கஹாலை கலந்து கெட்டுபோன ஊசி மூலம் நோயாளிகளின் உடலில் செலுத்தினார். அதனால் பலர் மஞ்சள் காமாலை, கல்லீரல் உள்ளிட்ட நோய் பாதித்து அவதிப்பட்டனர்.

இதற்கிடையே கைது செய்யப்பட்ட அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 39 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது

வெப்துனியாவைப் படிக்கவும்